மதுரையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஊரடங்கு காலத்தின்போது நடைபெற்ற இணையவழிப் படிப்பிற்காகத் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் குறிப்பிட்ட மாணவிக்கு ஆபாச படங்களை ஆசிரியர் அனுப்பியதாகவும் மேலும் மாணவியைத் தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.