தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகரில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் மகன் விக்னேஸ்வரன் (23). இவர், தூத்துக்குடியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். விக்னேஸ்வரனுக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த 18 வயதுடைய தனியார் பெண்கள் கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தினமும் பேசிவந்த இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். பின்னர், காதலித்து வந்த இருவரின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாக, சிவகாசிக்கு வந்த விக்னேஸ்வரன் மாணவியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது விக்னேஸ்வரன் தனது அலைபேசியில் வீடியோ படம் எடுத்து வைத்துள்ளார். அதன் பின்பாக காதலர்கள் இருவரும் வாட்ஸ்அப் மெசேஜ் வாயிலாக தொடர்பில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து, மீண்டும் மாணவியை விக்னேஸ்வரன் நெருக்கத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு கல்லூரி மாணவி மறுப்பு தெரிவிக்கவே, இருவரும் தனிமையிலிருந்த வீடியோ படத்தை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்வேன் என மிரட்டியுள்ளார்.