திருநெல்வேலி: வட்டிக்குப் பணம் வாங்கிய நபர் ஒருவரின் மிரட்டலின் காரணமாக தீக்குளித்ததாக பெண் ஒருவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியைச் சேர்ந்தவர், பிரதாபன். இவர் சென்னையில் உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (32). இத்தம்பதியினருக்கு பிரவீன் (11), தன்யாஸ்ரீ (7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
சென்னையில் வேலை பார்த்து வரும் பிரதாபன் ஊருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவது வழக்கம். தற்போது கரோனா தொற்று ஊரடங்கு காலமாக இருப்பதால் சென்னையிலேயே அவர் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி பிரதாபனின் மனைவி ரேகா, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.
அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குடும்பச் சூழ்நிலை காரணமாக தீக்குளித்ததாக மாஜிஸ்திரேட், மருத்துவர்கள் முன்னிலையில் காவல் துறையினரிடம் ரேகா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையில் ரேகா தீக்குளித்த தகவலறிந்து பிரதாபன் சொந்த ஊருக்கு விரைந்து வந்துள்ளார்.
கணவரிடம் சொன்னது:
இந்தச் சூழ்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்த ரேகா, திடீரென தனது கணவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கிய நபர் ஒருவரின் மிரட்டலால் தான் தீக்குளித்ததாக வாக்கு மூலம் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரேகா தனது கணவரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். தொடர்ந்து வட்டி கொடுத்து வந்தாலும், தற்போது கணவருக்கு தொழில் முடக்கம் காரணமாக வட்டியைக் கொடுக்க முடியவில்லை.
இதனால் வட்டியை வசூலிக்க வந்த இளைஞர் என்னையும், குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி துன்புறுத்தினர்.