தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நாகையில் இருசக்கர வாகனம் திருட்டு- பட்டப்பகலில் கைவரிசை! - nagappattinam bike theft

நாகப்பட்டினம்: பெருமாள் கோயில் மேல வீதியிலுள்ள வீடு ஒன்றில், அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.

nagapattinam
நாகையில் இருசக்கர வாகனம் திருட்டு- பட்டப்பகலில் கயவரின் கைவரிசை

By

Published : Mar 5, 2021, 8:18 AM IST

நாகப்பட்டினம் பெருமாள் கோயில் மேல வீதி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் நாகையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மதியம் கடையை முடித்துவிட்டு வீடு திரும்பிய கணேசன், தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உணவு சாப்பிட சென்றார்.

பின்னர் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட நாகை நகர காவலர்கள், இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது. இக்காட்சியினை கொண்டு குற்றவாளியை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விழுப்புரம்: பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details