தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2022, 7:46 PM IST

ETV Bharat / crime

வசமாய் மாட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளி; சேஸ் செய்துபிடித்த போலீஸ்

நான்கு கொலை வழக்குகள் உள்பட 20 வழக்குகளில் தேடப்பட்டுவந்த பம்மல் சத்யா என்ற நபர், காவல் துறையின் வாகனத் தணிக்கையின்போது சிக்கியுள்ளார்.

வசமாய் மாட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி
வசமாய் மாட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கல்லியம்மன் நகரில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை ஆய்வாளர் ராஜ்குமார் மடக்கினார். இருவரும் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இருவரையும் விரட்டிச்சென்ற காவலர்கள் ஒரு வழியாக ஒருவரை பிடித்துவிட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். விசாரணையில், பிடிபட்ட நபர் பம்மல் பகுதியைச் சேர்ந்த பம்மல் சத்யா(23), என்பதும் இவர் மீது நான்கு கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்தது.

கைதான மூன்று பேர்

மேலும், குன்றத்தூரில் பதுங்கியிருந்த பழந்தண்டலத்தைச் சேர்ந்த நவீன் (20), கர்ணா (20) ஆகியோரையும் கைது செய்தனர். இதில், நவீன் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து 1.15 கிலோ கஞ்சா, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இம்மூவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details