தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2021, 6:41 PM IST

ETV Bharat / crime

குடும்பத்தகராறு காரணமாக கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கூலி தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித் தொழிலாளி தற்கொலை
கூலித் தொழிலாளி தற்கொலை

திருவாரூர்: நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடியை அடுத்த சிறுபுலியூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் கோபாலகிருஷ்ணன்(35); கூலித் தொழிலாளி. இவருக்கும் கவிதா என்பருக்கும் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

கோபாலகிருஷ்ணனுக்கும் கவிதாவிற்கும் குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு (ஜூன்18) தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் கோபாலகிருஷ்ணன் இறந்து கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அருகில் இருப்பவர்கள் பேரளம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கோபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரளம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தலையில் கல்லை போட்டு கொலை: காசநோய் மருத்துவமனையில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details