பேஸ்புக் மூலம் காதல் வலை
கேரளா மாநிலம் கும்பேளத்தைச் சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞருக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ஜீனத்திற்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் மிக நெருக்கமாக, ஜீனத்தை தேடி சுரேஷ் மங்களூரு வந்துள்ளார்.
பின்னர், மங்களூரு வந்த சுரேஷை ஜீனத், தனது காரில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தர்ம அடி காத்திருப்பது தெரியாது அங்கு சென்ற சுரேஷை ஜீனத் கணவர் உள்பட நால்வர் சேர்ந்து அடித்து, ஆடைகளற்ற புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த புகைப்படத்தை வைத்து மிரட்டி சுரேஷிடம் அந்த கும்பல் ஐந்து லட்சம் ரூபாயை கேட்டுள்ளது. இதற்கு தற்போது தன்னால் முப்பதாயிரம் ரூபாய்தான் தர முடியும் எனவும், பின்னர் மொத்த ரூபாயையும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் கூறி அந்த இடத்திலிருந்து தப்பித்து வந்து புகார் அளித்துள்ளார்.
காதல் வலையில் சிக்க வைத்தவர்கள் இப்போது காவல் சிறையில்...!