சென்னை: பூக்கடை பகுதி தேவராஜ் முதலி தெருவில் பூக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக 1 கோடியே 85 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.
அந்த பணத்திற்குண்டான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத் (52) மற்றும் மண்ணடியை சேர்ந்த அம்ஜித் கான் (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.