தமிழ்நாடு

tamil nadu

திருமணமாகாத ஏக்கம்: அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை

ஈரோடு: திருமணமாகாத ஏக்கத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Aug 5, 2021, 8:09 AM IST

Published : Aug 5, 2021, 8:09 AM IST

தற்கொலை
தற்கொலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேள்ள சின்ன கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமணி (38). இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேட்டுப்பாளையம் கிளையில், பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார்.

இவர் தனக்குத் திருமணமாகாத காரணத்தினால், நீண்ட நாள்களாக ஏக்கத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி ரமணி மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி நேற்று (ஆக. 4) ஈரோடு மாவட்ட புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர், ரமணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருமணமாகாத ஏக்கத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details