தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

போலீசாக நடித்து ஏமாற்றியவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

துணை ஆணையர் என ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரை திண்டுக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By

Published : Aug 14, 2021, 7:05 AM IST

குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு
குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு

திண்டுக்கல்:வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அந்த வழியாக சைரன் வைத்த ஜீப்பில் வந்து, காவல் துணை ஆணையர் எனக் கூறி மிரட்டிய சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில் கைது காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

அதில், அவர் போலியாக தன்னை துணை ஆணையர் என கூறி ஏமாற்றியது தெரிய வந்ததும், காவல்துறையினர் விஜயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் காவலர் உடையில் சுற்றித் திரிந்த புகைப்படங்களை வைத்து விஜயனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது விஜயன் காவல்துறை அலுவலர் எனக் கூறி முகநூல் நட்பின் மூலம் பல பெண்களிடம் காவல்துறையில் பணி வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில், விஜயின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதையும் படிங்க:டிவிஎஸ் XL வாகனங்களை குறிவைத்து திருடிய பலே திருடன் கைது

ABOUT THE AUTHOR

...view details