திண்டுக்கல்: சொத்து தகராறில் ஏற்பட்ட முன் பகையால் பழிக்குப்பழியாக விவசாயி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நத்தம் அருகே பெரியமலையூர்- பள்ளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளை (65). இவரும் அதே ஊரைச் சேர்ந்த ராசுவும் (80) உறவினர்கள். இவர்களுக்கிடையே பல வருடங்களாக சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராசு மகன் வெள்ளைகண்ணு, வெள்ளை உறவினர் தங்கராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் சூழலில், இவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.
இதையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ராசுவின் மகன் அர்ஜுனன் (36), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளையை சராமரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வெள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.