தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

காவலர் வங்கிக் கணக்கில் மோசடி: சைபர் கிரைம் விசாரணை - வேலூரில் சைபர் கிரைம்

வேலூரில் காவலரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 80 ஆயிரம் ரூபாய் லோன் எடுத்து மோசடியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

காவலர் வங்கி கணக்கில் மோசடி: சைபர் கிரைம் விசாரணை
காவலர் வங்கி கணக்கில் மோசடி: சைபர் கிரைம் விசாரணை

By

Published : Dec 3, 2021, 7:58 AM IST

வேலூர்: தெற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவருபவர் பிரபு (33). இவர் தனது பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கில் நீண்ட நாள்களாகப் பணம் எதுவும் வைக்காமலும், பயன்படுத்தாமலும் இருந்துள்ளார்.

இந்நிலையில், பிரபுவின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், பிரபு வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விவரங்களைத் தெரிவிக்க போலியான ஆன்லைன் முகவரி (Web address) ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது.

வங்கிக் கணக்கில் மோசடி

வங்கிக் கணக்கில்தான் பணம் இல்லையே, விவரங்களைப் பதிவுசெய்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற அறியாமையில் பிரபு போலி ஆன்லைன் முகவரியில் அவரது வங்கிக் கணக்கு, இதர முக்கிய விவரங்களைப் பதிவுசெய்துள்ளார்.

அப்போது, குறுந்தகவலை அனுப்பியிருத்த அடையாளம் தெரியாத நபர்கள், பிரபு பதிவுசெய்த விவரங்கள் மூலம் அவருடைய வங்கிக் கணக்கில் 80 ஆயிரம் ரூபாய்க்கு லோன் விண்ணப்பித்தனர். அந்தப் பணம் பிரபுவின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. அடுத்த சில நிமிடங்களில் அதிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

வங்கிக் கணக்கிற்கு வந்த 80 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் சில நிமிடங்களில் வேறு கணக்கிற்கு மாறியதைக் கண்டு அதிர்ந்த பிரபு, இது குறித்து வங்கியில் விசாரித்துள்ளார். அப்போது, பிரபு 80 ஆயிரம் ரூபாய் வங்கியில் கடன் பெற்றிருப்பதாகவும், அதிலிருந்து 50 ஆயிரம் வேறு வங்கிக் கணக்கிற்கு மாறியுள்ளதாகவும் வங்கித் தரப்பில் தெரிவித்தனர்.

சைபர் கிரைம் எச்சரிக்கை

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரபு, இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையடுத்து, “பொதுமக்கள் வங்கிக் கணக்கு தொடர்பான ஏதாவது தகவல் வந்தால் அதில் எந்த விவரங்களையும் பதிவுசெய்ய வேண்டாம். சில நிமிடங்களில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிடுகிறார்கள். எனவே தேவையின்றி வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால் அதனை ரத்துசெய்வது நல்லது. மேலும் எந்தவிதமான விவரங்களையும் ஆன்லைன், செல்போன்களில் தெரிவிக்க வேண்டாம்” என சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பவர்பேங்க் செயலி பண மோசடி: டெல்லி சிறையில் இருந்தவரை விசாரிக்கிறது சிபிசிஐடி

ABOUT THE AUTHOR

...view details