தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வாடகை காரை திருடிய வாடிக்கையாளர்கள் - சிசிடிவி காட்சி - புஞ்சை புளியம்பட்டி வாடகை கார்

ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கு காரை எடுத்துக் கொண்டு சென்றவர்கள் ஓட்டுநரை ஏமாற்றிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காரை திருடிச் சென்றுள்ளனர்.

Customers who stole a rental car
வாடகை காரை திருடிய வாடிக்கையாளர்கள்

By

Published : Jan 9, 2022, 6:25 AM IST

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் புஞ்சை புளியம்பட்டியில் வாடகை கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று (ஜன.8) இரண்டு நபர்கள் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டும் கார் வாடகைக்கு தேவை எனக் கேட்டுள்ளனர்.

அப்போது ராஜேஷ்கண்ணா, புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த கோபால் என்ற ஓட்டுனரை காரை ஓட்டுமாறு கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கோபால் கோயம்புத்தூர் நோக்கி சென்றுள்ளார். சரவணம்பட்டி அருகே சென்ற போது காரில் வந்த இருவரும் டீ சாப்பிட வேண்டும் எனக் கூறியதால் ஓட்டுநர் கோபால் காரை நிறுத்தியுள்ளார்.

வாடகை காரை திருடிய வாடிக்கையாளர்கள்

அதன்பிறகு ஓட்டுநர் கோபால், டீ சாப்பிட்டுவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சிறிது தூரம் சென்ற போது காரில் வந்த இருவரும் காரின் அருகே செல்போன் பேசுவது போல் திடீரென காரை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக தப்பினர்.

இதைக்கண்ட ஓட்டுநர் கோபால், காரை திருடிச் செல்கின்றனர் என சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் சிறிது நேரம் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போது காரை திருடிச் செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ரயில்வே அலுவலரின் அவசரத்தால் நேர்ந்த விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details