தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்!

கடலூர்: அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை ஏமாற்றி பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

By

Published : Feb 13, 2021, 6:32 PM IST

Breaking News

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமிக்கு, கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று (பிப்.12) அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று (பிப்.13) மாலை 4 மணியளவில், பாக்கியலட்சுமியிடம் ஒரு பெண் வந்து, குழந்தையை தங்களது மாமியார் மருத்துவமனை கீழ் உள்ள கோவிலில் வைத்து வழிபடக் கேட்பதாகக் கூறி பிறந்த குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அப்பெண் திரும்பி வராத நிலையில் பதறிப்போன பாக்கியலட்சுமி, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை அந்தப் பெண் தன் புடவையில் மறைத்தவாறு, அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறி ஆட்டோவில் ஏறிச் செல்வது பதிவாகியுள்ளது.

இந்நிகழ்வு பற்றி கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாலியை பறிக்க முயன்றவருக்கு தர்மஅடி!

ABOUT THE AUTHOR

...view details