தமிழ்நாடு

tamil nadu

எழும்பூர் ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டு - 2 பேர் கைது

By

Published : Jul 10, 2022, 3:36 PM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போனை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து 47 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு
கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு

சென்னை:எழும்பூர் ரயில் நிலையம் அருகில் நேற்று போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒடிசாவைச் சேர்ந்த நந்து பிரதான், ஆந்திராவைச் சேர்ந்த சாய்குமார் என்பது தெரிய வந்தது. 2 பேரும் கூட்டநெரிசலில் செல்போன்களை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேரும் நெமிலிச்சேரியில் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை செய்த போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதாக என்பது தொடர்பாக எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தொழிலதிபரின் வீட்டில் நகை, பணம் திருட்டு - குற்றவாளி கைது

ABOUT THE AUTHOR

...view details