தமிழ்நாடு

tamil nadu

சென்னை அருகே விபத்து:  5 இளைஞர்கள் உயிரிழப்பு

By

Published : Sep 5, 2021, 10:51 AM IST

பெருங்களத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்த இளைஞர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை அருகே விபத்து
சென்னை அருகே விபத்து

சென்னை:மேட்டூரைச் சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியைச் சேர்ந்த அஜய், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சங்கர். இவர்கள் துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள்.நாளை (செப்.6) நடைபெற உள்ள நேர்காணல் (Interview) ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தனர்.

நண்பர்களுடன் தி.நகரில் பொருள்களை வாங்கிவிட்டு இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். உடனிருந்த நண்பர்களிடம், வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வருவதாகக் கூறிவிட்டு, இளைஞர்கள் 5 பேரும் அங்கிருந்து காரில் புறப்பட்டுள்ளனர்.

பெருங்களத்தூர் அருகே

5 பேர் உயிரிழப்பு

சொகுசு காரை மேட்டூரை சேர்ந்த நவீன் என்பவர் ஓட்டியுள்ளார். தாம்பரத்திலிருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது,பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே, கார் நிலைதடுமாறி அங்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில், காரிலிருந்த ஐந்து இளைஞர்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், 2 மணிநேரப் போராட்டத்திறகுப் பின்பு விபத்துக்குள்ளான காரிலிருந்து உடல்களை மீட்டனர். பின்னர் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'காற்றாடியை பிடிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு'

ABOUT THE AUTHOR

...view details