திருப்பூர் மாவட்டம் உடுமலை, ராமசாமி நகரைச் சேர்ந்த மனோகார்த்தி்க் (31), ஓனாக்கல்லூரைச் சேர்ந்த பவித்ரா (23) ஆகியோருக்கு மூன்று மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. மனோகார்த்திக் தளி ரோட்டிலுள்ள, செல்போன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் (பிப். 4) இரவு, 9 .10 மணிக்கு கடையை பூட்டி விட்டு, நண்பர் மணிபாரதியுடன், செல்போன் கடை விற்பனை பணத்தை கொடுக்க, பசுபதி வீதிக்கு சென்றார். அப்போது, காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மனோகார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர் நிலைகுலைந்து சரிந்ததும், அந்தக் கும்பல் தப்பியோடியது.