தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2021, 4:06 PM IST

Updated : Jun 4, 2021, 5:39 PM IST

ETV Bharat / crime

தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு மூன்று நாள் போலீஸ் காவல்!

தடகள பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் வழக்கு
தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்

15:55 June 04

சென்னை: பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மே 28ஆம் தேதி கைதான நாகராஜனுக்கு, ஜூன் 11 வரை நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், மேலும் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், பயிற்சியாளர் நாகராஜனை3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. சென்னை நந்தனத்தைச் சேர்ந்த நாகராஜன் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் உள்ள பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். 

மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் இவரிடம், தடகள வீராங்கனைகள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர். இச்சூழலில், நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரும் பரபரப்பு புகாரளித்தார். அதில், பல சமயங்களில் பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி, பாலியல் சீண்டலில் நாகராஜன் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நாகராஜனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

Last Updated : Jun 4, 2021, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details