சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன். இவர் தேசிய அளவில் 11 பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்றுள்ளார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகிகளால் சாந்தி சௌந்தரராஜன் சாதி மற்றும் பாலின பாகுபாடு அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார்.
உதவி ஆணையரின் கேள்வி
இதுதொடர்பாக தேசிய பட்டியல் சாதி ஆணையத்தின் உதவியுடன் வேப்பேரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் சாந்தி சௌந்தர்ராஜன் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, சாந்தி சௌந்தரராஜன் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர் ஹரிகுமார், பெண் என்பதற்கான சான்றிதழ் நீங்கள் வழங்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. கூறியுள்ளார்.