காஞ்சிபுரம்: பிச்சிவாக்கம் அருகே அறுந்துகிடந்த மின்சாரக் கம்பியில் தெரியாமல் கால் வைத்த எட்டு வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பிச்சிவாக்கம் அடுத்துள்ள பட்டு முதலியார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பலராமன் - விமலா தம்பதி, தங்களுக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தில் மல்லிகைப்பூ தோட்டம் வைத்துப் பராமரித்துவருகிறார்கள். இந்தத் தம்பதியருக்கு ஸ்ரீமதி என்ற எட்டு வயது மகள் இருந்தார்.
இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று முழுவதும் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் வேளாண் நிலத்தின் வழியே செல்லக்கூடிய மின்சார வயர் அறுந்து மல்லிகைப்பூ தோட்டத்தின் உள்ளே விழுந்துகிடந்தது.
மின்சார வயர் அறுந்துவிழுந்து கிடந்ததை அறியாத சிறுமி ஸ்ரீமதி, தனது தோட்டத்தின் உள்ளே செல்லும்பொழுது மின்சார வயரின் மீது தெரியாமல் கால் வைத்துள்ளார். இதில் சிறுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.