ரேணிகுண்டா:சிட்டூர் மாவட்டம் ரேணிகுண்டாவில் நேற்று (ஜனவரி 20) இக்கொடூரச் சம்பவம் நடந்தேறியது. காவல் துறையின் தகவல்படி, ரவிச்சந்திரன் (53) - வசுந்தரா தம்பதியினர் ரேணிகுண்டாவில் வசித்துவந்தனர். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில், இந்தத் தம்பதிக்கு இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், கோபத்தின் மிகுதியில் வசுந்தரா தனது கணவனைக் கொடூரமாகக் கொலைசெய்து அவரின் தலையை வெட்டிப் பையில் போட்டுக் கொண்டு காவல் துறையில் சரணடைந்துள்ளார்.