தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 11 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை

By

Published : Jul 11, 2021, 4:58 PM IST

சென்னை:ஆதம்பாக்கம், மோகனபுரி 4ஆவது தெருவைச் சேர்ந்தவர்கள் ரவிசந்திரன்- வெங்கம்மாள் தம்பதி. இவர்களுக்கு, 16 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாள்ய ரவிச்சந்திரன் ஆந்திரமாநிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். வெங்கம்மாள் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

நேற்றிரவு, வெங்கம்மாள் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றிருக்கிறார். வீட்டில் மகனும் மகளும் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டில் ஒரு அறை மட்டுமே இருப்பதால், துணி மாற்ற வேண்டும் எனக் கூறி தங்கை, தன் அண்ணனை வெளியப் போக சொல்லியிருக்கிறாள்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கததால் சந்தேகமடைந்த அண்ணன் கதவைத் திறந்து பார்த்த போது, தனது தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக ஆதம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு போக்சோ

ABOUT THE AUTHOR

...view details