தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலூரில் சந்தன மரம் கடத்தியவர் கைது... மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு.. - மேல்அரசபட்டு காப்புக்காடு

வேலூர் அருகே 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தநிலையில் தப்பியோடிய 2 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 29, 2022, 8:55 PM IST

Updated : Aug 29, 2022, 11:03 PM IST

வேலூர்: மேல்அரசபட்டு காப்புக்காடு பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட ஒடுக்கத்தூர் வனச்சரக வனத்துறையினர் நள்ளிரவில் சந்தன மரம்வெட்டி கடத்த முயன்றவர்களில் ஒருவரை இன்று (ஆக.29) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தொங்கு மலைபகுதியைச்சேர்ந்த பிரகாஷ்(21) என்பதும் அவரிடமிருந்து, சுமார் 100 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடந்த தொடர் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் தப்பியோடிய கலையரசன், சிவராமன் ஆகியோரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இவர்கள் 3 வரும் சந்தன மரங்களை வெட்டி வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கடத்துவது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர்

Last Updated : Aug 29, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details