வேலூர் சவலன்பேட்டையைச் சேர்ந்த கணேஷ், அதே பகுதியில் உள்ள சாதுகாரமடம் தெருவில் நகை அடகு மற்றும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.25) மாலை அதே பகுதியை சேர்ந்த காலாசா (37) என்பவர் மதுபோதையில் கையில் சவரக்கத்தியுடன் கணேஷின் நகைக்கடையில் நுழைந்து 50 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கணேஷின் நகை கடைக்குள் நுழையும் காலாசா "50 ரூபாய் கொடு" என முதலில் ஆரம்பித்து பின்னர் கெஞ்சி பார்க்கிறார். நீண்ட நேரம் ஆகியும் 50 ரூபாயை கணேஷ் கொடுக்க மறுக்கே "50 ரூபா கொடுக்குறியா இல்ல அறுத்துடவா" என மிரட்டும் தொனியில் ஆரம்பிக்கிறார். இதற்கும் மசியாத கடை உரிமையாளர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட காண்டாகிய காலாசா "நான் நியாயமா தான கேக்குறேன் 50 ரூபா கொடுத்துறு" என மீண்டும் தன் பக்க நியாயத்தை விளக்கி 50 ரூபாய் கேட்கிறார்.
இறுதியில் கையில் வைத்திருந்த சவரக்கத்தியோடு கடை உரிமையாளரை பலமாக தாக்க முயற்சிக்கிறார். அப்போது காலாசாவை பதிலுக்கு கடை உரிமையாளரும் கையில் கட்டையுடன் எதிர்க்கிறார். பின்னர் ஒருவர் வந்து கலாசாவை கூட்டிச் செல்கிறார்.