தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மது போதையில் அரசு மருத்துவமனை ஊழியர் அடாவடி!

வேலூர்: அரசு மருத்துவமனையில் நோயாளி மது போதையில் இருந்த உதவியாளர், நோயாளி தரப்பினரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Sep 5, 2019, 9:00 PM IST

அரசு மருத்துவமனையில் மதுபொதையில் மருத்துவ உதவியாளர்..!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஜெகதீசன் என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்து அரசு மருத்துவரிடம் கையெழுத்து பெற சென்றபோது, அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் மாரிமுத்து என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால் தான் உங்களுக்கு கையெழுத்து பெறமுடியும் என்று கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை ஊழியர் அடாவடி

அப்போது நோயாளி தரப்பினரை கழுத்தை பிடித்து மாரிமுத்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற காட்சி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details