வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தை அடுத்த தஞ்சாவுரான் காலனி பகுதியில் வழக்கம்போல் இன்று காலை சிலர் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு ஒன்று சடலமாகக் கிடந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் கால்வாயில் வீசப்பட்டு இருந்த பெண் சிசுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.