தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்

வேலூர்: முருகனிடமிருந்து செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான அவரை மீண்டும் அடுத்த மாதம் 3ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

By

Published : Jan 21, 2020, 7:10 PM IST

முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகனின் அறையிலிருந்து கடந்த அக்டோபர் 18ஆம் தேதி செல்ஃபோன், ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அது தொடர்பாக இவரின் மீது வேலூர் மத்திய சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக முருகன் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.

முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில் இன்று 5ஆவது முறையாக நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் (பொறுப்பு) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் முருகனை அடுத்த மாதம் 3ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இதனையடுத்து முருகன் பலத்த பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க:

வேலம்மாள் குழுமத்தில் அதிரடி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details