தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2020, 12:24 PM IST

ETV Bharat / city

ஏழு வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா உறுதி

வேலூர்: ஏழு வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கரோனா உறுதி
7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கருகம்புத்தூர், ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று (COVID 19) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்.என்.பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் வேலூர் பழைய பென்ட்லெட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் வசித்த பகுதியில் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் உள்ளதால் அப்பகுதி ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details