வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியானது பாஜக சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது வரவேற்கத்தக்கது.