தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கள்ள காதலுக்கு நீதிமன்றம் அனுமதித்ததால் தான் இது போன்று நடக்கிறது - இந்து முன்னணி மாநில தலைவர்! - hindu makkal party

திருச்சி: கள்ளக்காதல் போன்ற கலாச்சார சீர்கேடுகளுக்கு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது தான் இத்தகைய பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு காரணம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் கூறியுள்ளார்.

tri

By

Published : Mar 14, 2019, 9:22 PM IST

திருச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

திருமணமாவதற்கு முன்பே பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்ளலாம், கள்ளக்காதல் போன்ற கலாச்சார சீர்கேட்டிற்கு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது தான் இத்தகைய பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு காரணம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்து முன்னணி கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்தார்.


ABOUT THE AUTHOR

...view details