பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் சாலை வரியை குறைக்க வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன ஓட்டுநர்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று(பிப்.4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் நவீன், மாநில துணைச் செயலாளர் அலெக்ஸ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார், "தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் உயர்வால் வாகன ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மனிதன் முதல் முதலமைச்சர் வரை வாகனம் ஓட்ட கண்டிப்பாக ஓட்டுநர் தேவை. ஓட்டுநர்களின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்வதில்லை.