தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலைவர்கள் குறித்து உரையாற்றி ஒன்றாம் வகுப்பு மாணவன் உலகச் சாதனை! - trichy student world record on maths

திருச்சி: ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் உலகத் தலைவர்களைப் பற்றி நான்கு நிமிடம் தொடர்ந்து உரையாற்றி ஜெட்லீ புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

trichy student world record

By

Published : Nov 3, 2019, 8:17 AM IST

திருச்சி மாவட்டம் உறையூரில், தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சஜூவா என்ற சிறுவனின் உலகச் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் அச்சிறுவன் முதலாவதாக 40 விநாடிகளில் ஐந்து கணக்குகளை முடித்தும், தொடர்ந்து இரண்டாவதாக உலக தலைவர்களான பிடல் காஸ்ட்ரோ, சாக்ரடீஸ், திருவள்ளுவர்,சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியார், விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன், ஆகியோரைப் பற்றி நான்கு நிமிடம் 36 வினாடிகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி உலகச் சாதனை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இவர் புரிந்த சாதனைகள் சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்து உலகச் சாதனையாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சாதனை ஜெட்லீ புக் ஆப் வேர்ல்டு ரெகார்ட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இது அச்சுறுவனின் இரண்டாவது சாதனையாக கூறப்படுகிறது. இந்நிகழ்வில் சிறுவனின் பெற்றோர் கராத்தே மாஸ்டர் டிராகன் ஜெட்லீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவன் சஜூவா உலகச் சாதனை நிகழ்ச்சி

மேலும் மாவட்ட செய்திகள்:

கஞ்சா கும்பலால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட பொறியியல் மாணவர் உடல் மீட்பு

சுஜித்தின் மீட்புப் பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவு - ஆட்சியர் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details