தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'53,059 வீடுகளில் குப்பைத் தரம் பிரித்து வழங்கல்' - மாநகராட்சி ஆணையர் தகவல் - குடியிருப்புகளில் மாநாகராட்சி அலுவலர்கள் ஆய்வு

திருச்சி: மாநகராட்சிப் பகுதியில் உள்ள 53 ஆயிரத்து 59 வீடுகளில் வசிப்பவர்கள் அவர்களுடைய குப்பைகளைத் தரம் பிரித்து, வழங்குவதாக ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குடியிருப்புகளில் மாநாகராட்சி அலுவலர்கள் ஆய்வு
குடியிருப்புகளில் மாநாகராட்சி அலுவலர்கள் ஆய்வு

By

Published : Dec 6, 2019, 8:30 PM IST

திருச்சி மாநகராட்சியின் கோ- அபிசேகபுரம் கோட்டம், தில்லை நகர் சாஸ்திரி ரோடு, ஹவுசிங் யூனிட் பகுதி, கீரக்கொல்லைத் தெரு, டாக்கர் ரோடு, காளையன் தெரு ஆகியப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்களது வீடுகளில், உள்ள குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதையும், மட்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் பணியையும் மேற்கொள்கின்றனர். இது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் அப்பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது ஆணையர் கூறுகையில், 'திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் 214 சிறிய வாகனங்களைக் கொண்டு, வீடுகள் தோறும் மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும்; பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குகிறார்களா என்றும்; மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் பணியை மேற்கொள்கிறார்களா என்றும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார்.

குடியிருப்புகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு

மேலும் அவர் 'பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் பொருட்டும்; ஒவ்வொரு வாரமும் அலுவலர்கள் நேரில், சென்று பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள 74 ஆயிரத்து 900 வீடுகளில், 53 ஆயிரத்து 59 வீடுகளில் வசிப்பவர்கள் பொதுமக்கள் குப்பைகளை பிரித்தே வழங்கினர். குப்பைகளை பிரிக்காமல் வழங்கியவர்களிடம் பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்' கூறினார்.

இதையும் படிங்க:

"நிராகரிக்கப்பட்டது போதும்; நிலைமை மாறட்டும்" - திருநங்கைகள் ஆவண மையம்

ABOUT THE AUTHOR

...view details