திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வ.உ.சி. சாலையில் மறைந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது. மேலும், அதே பகுதியில் பி.டி. பன்னீர்செல்வத்தின் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், எம். கே. தியாகராஜ பாகவதர் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் வ.உ.சி. சாலையில் உள்ள இடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சில மாதங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.