தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2022, 2:52 PM IST

ETV Bharat / city

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்: ஒரே வாரம் ஒரு கோடி!

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 95 லட்சம் ரூபாய், 3 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவை பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாகக் கிடைத்துள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயில்
சமயபுரம் மாரியம்மன் கோயில்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் பிரசித்திப் பெற்றதாகும். இந்தத் தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள், பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்திவருகின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயில்

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

அப்போது கடந்த ஏழு நாள்களில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை 96 லட்சத்து 58 ஆயிரத்து 770 ரூபாயும், 3 கிலோ 157 கிராம் தங்கமும், 2 கிலோ 952 கிராம் வெள்ளியும், 98 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன எனக் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாசிமகம் - காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details