திருச்சி: புதுக்கோட்டை சாலையில் உள்ள எம்ஐடி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் (20.06.2022) வாகன சோதனையின்போது காரிலிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாக வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கேகேஎஸ்.செல்வகுமார் தேடப்படும் நபராக திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.