திருச்சி: உலக வன தினத்தை முன்னிட்டு திருச்சி என்ஐடியில், இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், பதிவாளர் பொறுப்பாளர் அறிவழகன் முன்னிலையில் 'மியாவாக்கி' வனத் தோட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டது.
'மியாவாக்கி' என்பது ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது நகர்ப்புற பசுமைக்கும் காடு வளர்ப்புக்கும் முன்னோடியாகக் கொண்ட ஒரு நுட்பமாகும். 0.58 ஏக்கர் பரப்பளவு கொண்ட மியாவாகி காட்டில் 60-70 பூர்வீக தாவரங்கள், 10-20 மூலிகை வகைகள், பழங்கள், பூக்கும் மரக்கன்றுகள் உள்ளன. இதுதொடர்பாக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் பேசியதாவது:
மரங்கள் வளாகத்தின் பசுமையை மேம்படுத்தவும், பல்லுயிர் தன்மையை பாதுகாக்கும் என்றும், இதுபோன்ற பல மியாவாகி காடுகள் எதிர்க்காலங்களில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் திட்டமிடப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த காடுகள் வளாகத்தின் பசுமை மையங்களாக செயல்படும்.