திருச்சி மாவட்டம் மணப்பாறையின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க போதிய இடவசதியில்லாததால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் காய்கறிச் சந்தையானது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மஞ்சம்பட்டி புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த புதிய காய்கறிச் சந்தையானது மணப்பாறையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், இந்த காய்கறிச் சந்தையை மணப்பாறை பேருந்து நிலையம் அல்லது மதுரை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதிக்கு மாற்றித் தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.