திருச்சி: மணிகண்டம் மட்டபாரப்பட்டி ஆற்றுப்பாலம் அருகே அதிவேகமாகவும் தாறுமாறாகவும் கார் வந்துள்ளது. அந்த கார் அங்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகமங்கலத்தை சேர்ந்த காதர் உசேன் என்பவர் மீது மோதியுள்ளது. அதில் காதர் உசேன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் பழனிவேல் என்பவர் மீது மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காதர் உசேனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.