தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதை மீட்பு மையத்தில் காவலர் மர்ம மரணம் - திருச்சி மருத்துவனை

திருச்சி: சிகிச்சைக்கு வந்தவர் உயிரிழந்ததால், சர்ச்சையில் சிக்கிய போதை மீட்பு மையம் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்ததாக சோதனை மூலம் தெரியவந்துள்ளது.

போதை மீட்பு மையத்தில் காவலர் மறுமமாக உயிரிழந்துள்ளார்

By

Published : Jun 5, 2019, 8:25 AM IST

திருச்சி கே.கே. நகர் அன்பழகன் தெருவில் லைஃப் கேர் சென்டர் டிரஸ்ட் என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மையத்தை, மணிவண்ணன், திவான் ஆகிய இருவரும் நடத்திவந்துள்ளனர்.

இந்த மையத்தில் தங்கி சிகிச்சைபெற்று வந்த தமிழ்ச்செல்வன் என்ற காவலர், இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இறந்த அவர் உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்த பெயரில்,

காவலர்கள் வழக்குப்பதிந்து அந்த சிகிச்சை மையத்தில் நடத்திய விசாரணையில், சிகிச்சைக்கு வரும் நபர்களை, சங்கிலியால் கட்டிப்போட்டு, அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மையத்தில் தங்கியிருந்தவர்களை மீட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் திருச்சி அரசு மருத்துவனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் நிரஞ்சனா தேவி என்பவர் காவலர்களின் அறிவுரையின்படி, இன்று அந்த மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போதை மீட்பு மையத்தில் காவலர் மறுமமாக உயிரிழந்துள்ளார்

ABOUT THE AUTHOR

...view details