தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சரக்கு வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு! - சரக்கு வாகன விபத்து

திருச்சி: மணப்பாறையில் சரக்கு வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

child killed in truck collision in trichy
child killed in truck collision in trichy

By

Published : Jan 11, 2021, 4:41 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மார்க்கெட்டிலிருந்து, ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை, சாலையை நோக்கி பின்புறமாக இயக்கினார். அப்போது அந்த வாகனம், சாலையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வானத்தின் மீது மோதியது.

அதனால், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மற்றும் குழந்தை இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு வாகன ஓட்டுநர் பாரதி(25) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் பாலத்தின் மீது மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details