தமிழ்நாடு

tamil nadu

யார் முந்தி செல்வது ? போட்டி போட்டதால் போன உயிர்...

By

Published : Apr 25, 2022, 11:50 AM IST

திருச்சி சமயபுரம அருகே நண்பர்கள் இடையே காரில் யார் முன்னே செல்வது என்ற போட்டியில் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சாலையோர மரத்தில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

car-accident-in-samayapuram-toll-gate-one-dead போட்டி போட்டதால் போனது உயிர்
car-accident-in-samayapuram-toll-gate-one-deadபோட்டி போட்டதால் போனது உயிர்

திருச்சி லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியை சேர்ந்த ஜெய்தேவ் (வயது 22), என்பவரும் அவரது நண்பர் வினோ மேத்திவ் (வயது 22), என்பவரும் நேற்று (ஏப்ரல்.24) நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அப்போது நண்பர்கள் இருவருக்கும் இடையே காரில் யார் முன்னே செல்வது என போட்டி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, இரண்டு பேரும் சாலையில் அதிவேகமாகக் காரை இயக்கினர். இரண்டு பேரின் கார்களும் சாலையில் சமமாக வந்தபோது திடீரென இரண்டு கார்களும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டதால் ஜெய்தேவ் ஓட்டிச் சென்ற கார், சாலையோரத்தில் இருந்த புலியமரத்தில் வேகமாக மோதி முன்பக்கம் முற்றிலும் அப்பளம்போல் நொறுங்கியது.

இதில் ஜெய்தேவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வினோ மேத்திவ் ஓட்டி வந்த கார் எதிரே வந்த சரக்கு வேனின் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று சாலையோரத்தில் நின்றது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கி பலியான ஜெய்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த வினோ மேத்திவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:Video: பெண்ணிடம் தவறாக நடந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்கமாற்றால் அடி

ABOUT THE AUTHOR

...view details