தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குறுக்கு வழியில் பிரதமரான மோடி என்னை குறை கூறுவதா? - உதயநிதி - தாராபுரம் தொகுதி

திருப்பூர்: வெளியூர்காரரான முருகனை தாராபுரம் தொகுதியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

udhayanidhi
udhayanidhi

By

Published : Apr 2, 2021, 4:34 PM IST

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் கயல்விழி செல்வராஜை ஆதாித்து, தாராபுரம் காவல் நிலையம் அருகே திமுக இளைஞா் அணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி, “நான் எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறேனோ, அதைவிட ஆயிரம் வாக்குகள் அதிக வி்த்தியாசத்தில் கயல்விழி செல்வராஜை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மோடி உங்கள் மீதும் மட்டுமல்ல, என் மீதும் கோவத்தில் உள்ளாா்.

மூத்தவா்களை ஓரங்கட்டி குறுக்கு வழியில் பிரதமா் ஆன இந்த மோடி, தாராபுரத்தில் பேசும்போது குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவன் என என் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் முதல்வராக வர எத்தனை பேரை இவர் ஓரங்கட்டிவிட்டு வந்தார் தொியுமா? அத்வானியை பின்னுக்குத் தள்ளி, சுஷ்மா சுவராஜை சாகடித்து பிரதமர் ஆனவர் மோடி. சசிகலாவின் காலை பிடித்து குறுக்கு வழியில் முதல்வரானவர் பழனிசாமி.

குறுக்கு வழியில் பிரதமரான மோடி என்னை குறை கூறுவதா? - உதயநிதி

இங்கு போட்டியிடும் பாஜக தலைவர் முருகன், கடந்த சட்டமன்ற தேர்தலில் ராசிபுரத்தில் வெறும் 1,500 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தவர். தற்போது வெளியூரிலிருந்து தாராபுரத்திற்கு வந்திருக்கும் முருகனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன், டார்ச்லைட்டை வீசியது சித்தரிக்கப்பட்டது - ஸ்ரீபிரியா

ABOUT THE AUTHOR

...view details