தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாடு பாஜக தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்' - வானதி சீனிவாசன் - In consultation with industry professionals

திருப்பூர்: தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

vanathi srinivasan

By

Published : Sep 4, 2019, 11:22 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றன.

ஆலோசனை கூட்டம்

காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது ஏன்? அதனால் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.

காஷ்மீர் விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாடோடு இருந்த நிலையில் பொதுமக்களிடம் திமுகவிற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவருகிறது.

தொழில் துறையினருடன் ஆலோசனை

மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் கட்சியின் தலைமை முடிவு செய்யும், தலைவர் இல்லாத காரணத்தால் பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் பணிகள் தொய்வின்றி நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details