திருப்பூர் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவரும், சேலம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த மணிமாறனும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்துவந்தனர். இந்த நிலையில் கார்த்திகா, மணிமாறன் இருவரும் நண்பர்களாகப் பழகிக் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்துவந்தனர். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்தது.
கார்த்திகாவும், மணிமாறனும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திகாவின் குடும்பத்தினர் அவருக்கும் வேறு திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துவந்தனர்.