தமிழ்நாடு

tamil nadu

டெல்லி விவசாயிகள் போராட்டம்: திருப்பூர், புதுக்கோட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திமுக சார்பில் திருப்பூர், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

By

Published : Dec 5, 2020, 1:47 PM IST

Published : Dec 5, 2020, 1:47 PM IST

போராட்டம்
போராட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். அதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

திமுக ஆர்ப்பாட்டம்

அதனடிப்படையில், இன்று (டிச. 05) திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து திருப்பூரில் கருஞ்சட்டை அணிந்து 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முற்படவே, காவலர்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் திமுகவினர்

அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் 1000-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அதில் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்லபாண்டியன், ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க:விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் ராகுல்

ABOUT THE AUTHOR

...view details