திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகள் பிரியதர்ஷினி இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதனால் இடது முழங்கையில் காயம் ஏற்பட்டு பிரியதர்ஷினியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அம்மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அழைத்துச்செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூட்ஸ் மருத்துவமனைக்கு (தனியார் மருத்துவமனை) மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.