திருப்பூர்:நொச்சி பாளையம் பிரிவு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் டாஸ்மாக் அருகில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு (நவ.12) 10 மணியளவில் மது போதையில் வந்த நபர் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளார்.
அதற்கு கடையில் வேலை செய்பவர் சில்லறை இல்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த போதை ஆசாமி 500 ரூபாய்க்கு 10 பாக்கெட் சிகரெட் கொடு எனக் கேட்டு கடைக்காரரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர், செந்தில்குமார் கடையை பூட்டிவிட்டு போதை ஆசாமியை பேசி விரட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
கடைக்கு தீ வைப்பு