தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே இராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (45). இவர் நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி நிர்மலா தேவி, ஆறுமுகநேரி பேரூராட்சியின் 14 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் இன்று (ஜூலை 12) திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலையில் அம்மன்புரம் அருகே சாலையோர டீக்கடை ஒன்றில் காலை சுமார் 8.30 மணி அளவில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.