தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டிச்சாமி என்பவரின் மகன் வீரசின்னு(36), இவரது மனைவி பாக்கியம் (32) இந்த தம்பதிக்கு வினித்(10), வினிதா(9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
தொடக்கத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்த வீரசின்னு, கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார்.
பணிக்கு சென்று 2 ஆண்டுகள் ஒப்பந்த பணி முடிவடைந்த நிலையில், ஊருக்கு வந்தவர் விடுமுறை முடிந்து மீண்டும் 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துபாய்க்கு சென்றுள்ளார்.
23 மாதங்கள் பணியாற்றிய நிலையில், மீதம் ஒரு மாதம் இருக்கும் நிலையில் கடந்த வாரம் மனைவியிடம் பேசுகையில் 20ஆம் தேதி ஊருக்கு திரும்ப உள்ளதாகவும், அதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் இறங்கி பின்னர் ஊருக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையெடுத்து வீரசின்னு உறவினர்கள் அவரை அழைத்து வர சென்றுள்ளனர். 20ஆம் தேதி 7.30 மணிக்கு தனது மனைவியிடம் பேசிய வீரசின்னு சார்ஜா விமான நிலையத்தில் இருப்பதாகவும், கரோனா பரிசோதனை செய்து, நெகடிவ் என்று முடிவு வந்துவிட்டதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் விமானம் கிளம்பிவிடும் என்றும், 11.20 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்று கூறியுள்ளார்.